Skip to content
1168

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை.

குறள் 1168

Mannuyir Ellaam Thuyitri Aliththiraa Ennalladhu Illai Thunai.

பொருள்

`இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.'.

English

All living souls in slumber soft she steeps; But me alone kind night for her companing keeps.

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!.

The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்