Skip to content
1289

மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்.

குறள் 1289

Malarinum Mellidhu Kaamam Silaradhan Sevvi Thalaippatu Vaar.

பொருள்

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

English

Love is tender as an opening flower In season due To gain its perfect bliss is rapture known to few.

காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.

Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்