Skip to content
1021

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில்.

குறள் 1021

Karumam Seyaoruvan Kaidhooven Ennum Perumaiyin Peetutaiyadhu Il.

பொருள்

உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.

English

Who says 'I'll do my work, nor slack my hand', His greatness, clothed with dignity supreme, shall stand.

குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

There is no higher greatness than that of one saying I will not cease in my effort (to raise my family).

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்