Skip to content
866

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.

குறள் 866

Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan Penaamai Penap Patum.

பொருள்

சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.

English

Blind in his rage, his lustful passions rage and swell; If such a man mislikes you, like it well.

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்