Skip to content
1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம் மறையிறந்து மன்று படும்.

குறள் 1254

Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam Maraiyirandhu Mandru Patum.

பொருள்

மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.

English

In womanly reserve I deemed myself beyond assail; But love will come abroad, and casts away the veil.

யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்