திருக்குறள்

321.

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.

திருக்குறள் 321

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.

பொருள்:

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

மு.வரததாசனார் உரை:

அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.