திருக்குறள்

108.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

திருக்குறள் 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

பொருள்:

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

மு.வரததாசனார் உரை:

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.