திருக்குறள்

239.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.

திருக்குறள் 239

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.

பொருள்:

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

மு.வரததாசனார் உரை:

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.