Skip to content
153

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.

குறள் 153

Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul Vanmai Matavaarp Porai.

பொருள்

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.

English

The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart.

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.

To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்