திருக்குறள்

360.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய்.

திருக்குறள் 360

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய்.

பொருள்:

விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.

மு.வரததாசனார் உரை:

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:

விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.