திருக்குறள்

1096.

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.

திருக்குறள் 1096

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.

பொருள்:

காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.

மு.வரததாசனார் உரை:

புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.