திருக்குறள்

856.

இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.

திருக்குறள் 856

இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.

பொருள்:

மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.

மு.வரததாசனார் உரை:

இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.

சாலமன் பாப்பையா உரை:

பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.