திருக்குறள்

1052.

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்.

திருக்குறள் 1052

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்.

பொருள்:

வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.

மு.வரததாசனார் உரை:

இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.