திருக்குறள்

590.

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற் புறப்படுத்தான் ஆகும் மறை.

திருக்குறள் 590

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற் புறப்படுத்தான் ஆகும் மறை.

பொருள்:

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.

மு.வரததாசனார் உரை:

ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:

மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.