திருக்குறள்

1073.

தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.

திருக்குறள் 1073

தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.

பொருள்:

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

மு.வரததாசனார் உரை:

கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை:

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.