திருக்குறள்

925.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.

திருக்குறள் 925

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.

பொருள்:

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

மு.வரததாசனார் உரை:

விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.