திருக்குறள்

439.

வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.

திருக்குறள் 439

வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.

பொருள்:

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.

மு.வரததாசனார் உரை:

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.