திருக்குறள்

797.

ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.

திருக்குறள் 797

ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.

பொருள்:

ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.

மு.வரததாசனார் உரை:

ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.