திருக்குறள்

734.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.

திருக்குறள் 734

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.

பொருள்:

பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

மு.வரததாசனார் உரை:

மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.