திருக்குறள்

994.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புள ராட்டும் உலகு.

திருக்குறள் 994

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புள ராட்டும் உலகு.

பொருள்:

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.

மு.வரததாசனார் உரை:

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

சாலமன் பாப்பையா உரை:

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.