திருக்குறள்

970.

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழு தேத்தும் உலகு.

திருக்குறள் 970

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழு தேத்தும் உலகு.

பொருள்:

மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.

மு.வரததாசனார் உரை:

தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.