திருக்குறள்

669.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.

திருக்குறள் 669

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.

பொருள்:

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.

மு.வரததாசனார் உரை:

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.