Skip to content
1308

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி.

குறள் 1308

Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum Kaadhalar Illaa Vazhi.

பொருள்

நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?.

English

What good can grieving do, when none who love Are there to know the grief thy soul endures.

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.

இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?.

What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?.

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்