திருக்குறள்

1308.

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி.

திருக்குறள் 1308

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி.

பொருள்:

நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?.

மு.வரததாசனார் உரை:

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை:

இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?.