திருக்குறள்

1301.

புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.

திருக்குறள் 1301

புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.

பொருள்:

ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.

மு.வரததாசனார் உரை:

( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

சாலமன் பாப்பையா உரை:

நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.