Skip to content
168

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.

குறள் 168

Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth Theeyuzhi Uyththu Vitum.

பொருள்

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.

English

Envy, embodied ill, incomparable bane, Good fortune slays, and soul consigns to fiery pain.

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.).

திருக்குறள்

The Timeless Tamil Classic by Thiruvalluvar

1330 குறள்கள் 133 அதிகாரங்கள் 3 பால்கள்