திருக்குறள்

170.

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

திருக்குறள் 170

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

பொருள்:

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.

மு.வரததாசனார் உரை:

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.