திருக்குறள்

374.

இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.

திருக்குறள் 374

இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.

பொருள்:

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

மு.வரததாசனார் உரை:

உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

சாலமன் பாப்பையா உரை:

உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.