திருக்குறள்

378.

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.

திருக்குறள் 378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.

பொருள்:

நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.

மு.வரததாசனார் உரை:

வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:

துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.