திருக்குறள்

208.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று.

திருக்குறள் 208

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று.

பொருள்:

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

மு.வரததாசனார் உரை:

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.