திருக்குறள்

210.

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.

திருக்குறள் 210

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.

பொருள்:

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.

மு.வரததாசனார் உரை:

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

சாலமன் பாப்பையா உரை:

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.