திருக்குறள்

331.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.

திருக்குறள் 331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.

பொருள்:

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

மு.வரததாசனார் உரை:

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.