திருக்குறள்

66.

குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

திருக்குறள் 66

குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

பொருள்:

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

மு.வரததாசனார் உரை:

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.