திருக்குறள்

291.

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல்.

திருக்குறள் 291

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல்.

பொருள்:

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

மு.வரததாசனார் உரை:

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.