திருக்குறள்

298.

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.

திருக்குறள் 298

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.

பொருள்:

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.