திருக்குறள்

1326.

உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.

திருக்குறள் 1326

உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.

பொருள்:

உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.

மு.வரததாசனார் உரை:

உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.

சாலமன் பாப்பையா உரை:

உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.