திருக்குறள்

1327.

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்.

திருக்குறள் 1327

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்.

பொருள்:

ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.

மு.வரததாசனார் உரை:

ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.