திருக்குறள்

631.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு.

திருக்குறள் 631

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு.

பொருள்:

உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

மு.வரததாசனார் உரை:

செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.