திருக்குறள்

637.

செயற்கை அறிந்தக் கடைத்து முலகத் தியற்கை அறிந்து செயல்.

திருக்குறள் 637

செயற்கை அறிந்தக் கடைத்து முலகத் தியற்கை அறிந்து செயல்.

பொருள்:

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.