திருக்குறள்

426.

எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு.

திருக்குறள் 426

எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு.

பொருள்:

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

மு.வரததாசனார் உரை:

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.