திருக்குறள்

427.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.

திருக்குறள் 427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.

பொருள்:

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

மு.வரததாசனார் உரை:

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

சாலமன் பாப்பையா உரை:

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.