திருக்குறள்

499.

சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோ டொட்ட லரிது.

திருக்குறள் 499

சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோ டொட்ட லரிது.

பொருள்:

பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

மு.வரததாசனார் உரை:

அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

சாலமன் பாப்பையா உரை:

மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.