திருக்குறள்

500.

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு.

திருக்குறள் 500

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு.

பொருள்:

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

மு.வரததாசனார் உரை:

வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.