திருக்குறள்

418.

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.

திருக்குறள் 418

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.

பொருள்:

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

மு.வரததாசனார் உரை:

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

சாலமன் பாப்பையா உரை:

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.