திருக்குறள்

419.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது.

திருக்குறள் 419

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது.

பொருள்:

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

மு.வரததாசனார் உரை:

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

சாலமன் பாப்பையா உரை:

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.