திருக்குறள்

553.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.

திருக்குறள் 553

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.

பொருள்:

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

மு.வரததாசனார் உரை:

நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

சாலமன் பாப்பையா உரை:

நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.