திருக்குறள்

558.

இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.

திருக்குறள் 558

இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.

பொருள்:

வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.

மு.வரததாசனார் உரை:

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.