திருக்குறள்

546.

வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.

திருக்குறள் 546

வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்:

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

மு.வரததாசனார் உரை:

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

சாலமன் பாப்பையா உரை:

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.