திருக்குறள்

641.

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று.

திருக்குறள் 641

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று.

பொருள்:

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.

மு.வரததாசனார் உரை:

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

சாலமன் பாப்பையா உரை:

நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.