திருக்குறள்

650.

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரிந்துரையா தார்.

திருக்குறள் 650

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரிந்துரையா தார்.

பொருள்:

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

மு.வரததாசனார் உரை:

தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை:

தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.